சேதமடைந்த நாணயத்தாள்கள் நாளை முதல் செல்லுபடியற்றதாகும். எனவே சேதமடைந்த நாணயத் தாள்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள் மற்றும் கிழிந்த நாணயத் தாள்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள இலங்கை மத்திய வங்கி கிளைகளில் மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாணயத்தாள்களில் எழுதுதல், அவற்றை ஏதேனும் ஒரு வகையில் சிதைத்தல் மட்டுமல்லாது அவற்றை வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனவே சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள் மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கி அல்லது மத்திய வங்கி கிளைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.
டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் சிதைவுக்குள்ளான நாணயத்தாள்கள் செல்லுபடியற்றதாகும். அவற்றை பாவனைக்குட்படுத்த முடியாது. அத்தோடு நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப் பணம் அல்லது சிறை தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும் என்பதும் குறிப்பிடத்தக்க தாகும்.