தனிமையில் இருந்த பெண் மர்மமான முறையில் மரணம்!!

615

பதுளை – நெலுகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண் வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் பதுளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்தே பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

75 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர், தலவத்துகொட பிரதேசத்தில் வீடொன்றில் தொழில் புரிந்து வரும் நிலையில் குறித்த பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

நீதவான் விசாரணைகளின் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.