இரையாக்கி கொண்ட மான் ஒன்றை விழுங்க முயற்சித்து படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட மலைப்பாம்பு ஒன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
பதவிய, சீயாய பிரதேசத்தில், மலைப்பாம்பு மான் ஒன்றை விழுங்க முயற்சிப்பதை கண்ட ஒருவர் அது குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அதிகாரிகள் அங்கு சென்ற போது மானை விழுங்க முயற்சித்த மலைப்பாம்பு படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
மலைப்பாம்பு பாதியாக விழுங்கியிருந்த இரையை கக்கியுள்ளது. அப்போது பாம்பின் வாய்ப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்துள்ள மலைப்பாம்பு சிகிச்சைக்கு பின்னர் பதவிய காட்டில் விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






