இலங்கைக்கு சுற்றுலா சென்ற சுவிஸ்லாந்து நாட்டு யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக நுவரெலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் அமைந்துள்ள சிங்கல்ட்ரீ வனப்பகுதிக்கு தனியாக சென்ற போதே குறித்த யுவதியை நபரொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
வனத்திலிருந்து திரும்பிய சுவிஸ் யுவதி தான் தங்கியிருந்த விடுதியின் முகாமையாளருக்கு தகவல் தெரிவித்த நிலையில், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
18 வயதான யுவதி ஒருவரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், அந்த மலைப் பகுதியிலுள்ள ஸ்காப் தோட்டத்தைச் சுற்றிவளைத்து, சந்தேகத்தின் பேரில் 11 பேரை கைது செய்துள்ளனர்.






