வவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு!!

1318

இன்று(14.01.2018) அதிகாலை வவுனியா புகையிரத நிலைய வீதியில் பயணித்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானதுடன் ஏனைய இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்

மேலதிக சிகிச்சை பயனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா வைரவபுளியன்குளத்தைச் சேர்ந்த பிரதாப் வயது 21, இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் (யுகு) வயது 24 ஆகிய இளைஞர்களே விபத்தில் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.