பிரபல பாடகி கழுத்து அறுக்கப்பட்டு கொலை!!

915

ஹரியானாவில் பஜனை மற்றும் நாட்டுப்புற பாடகி ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மம்தா சர்மா, இவர் பஜனை பாடல்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் பாடும் பாடகி ஆவார். இவருக்கு திருமணமாகி 20 வயதில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மம்தா சர்மாவைக் காணவில்லை என்று அவரது மகன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் மம்தா சர்மா இறந்த நிலையில், பனித்யானி என்னும் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கிடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் மம்தாவின் உடலைக் கைப்பற்றினர். அப்போது அவரின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது, வாயில் ரத்தம் படர்ந்திருந்தது.

இதுகுறித்து மம்தாவின் மகன் கூறும்போது, தனது தாய் காணாமல் போன அன்றே பொலிசில் புகார் அளித்ததாகவும், ஆனால் பொலிசார் விசாரணை மேற்கொள்ள மெத்தனம் காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

பொலிசார் தரப்பில் கூறும்போது, சந்தேகத்தின் பெயரில் இருவரை கைது செய்துள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.