சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயது முதியவர்!!

332

 
உணவு என்பது ஓர் மனிதனுக்கு எவ்வளவு அவசியமான ஒன்று, தினசரி மூன்று வேளைகளில் ஒருவேளை உணவு சாப்பிடாவிட்டாலும் மயக்கம், உடல் சோர்வு ஏற்படும் நிலை உருவாகும்.

இவ்வாறு இருக்கையில் எவ்வித சோர்வும் இன்றி தயங்காமல் சேற்றை சாப்பிட்டு வாழ்கிறார் 100 வயது முதியவர். “சேறு தான் தினசரி சோறு” என்கிறார் ஜார்க்கண்ட் மாநிலம், சாஹிப்கஞ் மாவட்டத்தில் வசிக்கும் கரு பஸ்வான்.

குடும்ப வறுமை காரணமாக 11 வயதிலிருந்தே சேறு சாப்பிட ஆரம்பித்தவருக்கு பின்னாளில் இதுவே பழக்கமாகி போனது. இது தொடர்பில் அவர் கூறுகையில், தினசரி 1 கிலோ சேறு வரை எடுத்துக்கொள்வேன், வறுமையின் உச்சத்தை தொட்டதாலும், இறப்பிலிருந்து பிழைக்கவே இதை உண்டு உயிர் வாழ்கிறேன். தினசரி இந்த சேற்றையே உண்டதால் அதற்கு அடிமையாகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்டவருக்கு குடும்பம், குழந்தைகளும் உள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பம் இந்த பழக்கத்தை நிறுத்த பலமுறை வலியுறுத்தியும் செவி சாய்க்கவில்லையாம்.

இப்படி சேறு, மண் சாப்பிடுபவர்களுக்கு பசியின்மை எனப்படும் Pica syndrome போன்ற பாதிப்புகள் ஏற்பட நேரிடும். இவரின் செயல் அருவருப்பாக இருந்தாலும் இவரை பாராட்டி 2015-ல் Bihar’s Sabour Krishi Vidyalaya எனும் பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது.