அம்மா… அவன் என்னை கொல்லப்போகிறான் : இளம்பெண்ணின் இறுதி எஸ்எம்எஸ்!!

578

பிரித்தானியாவில் மோசமான கொலையாளி ஒருவன் 20 வயது இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான்.

Kingston இல் வசித்து வரும் Mujahid Arshid (33) என்ற நபர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் சைக்கோ கொலையாளி ஒருவரால் ஈர்க்கப்பட்டுள்ளார்.<

நல்ல தொழிலுடன் விலையுயர்ந்த வீட்டில் வசித்து வரும் Arshid, தானும் பல கொலைகள் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டுள்ளான். அதன்படி, சில நாட்களுக்கு முன்னர் 20 வயது இளம்பெண்ணான Celine Dookhran ஐ கடத்தியுள்ளான்.

அந்த இளம்பெண் இறப்பதற்கு முன்னர், தனது தாய்க்கு, அம்மா அவன் என்னை கொலைசெய்யப்போகிறான் என இறுதியாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

ஆனால் இந்த செய்திக்கு பதில் அனுப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். அதன்பின்னர், குற்றவாளியிடம் இருந்து அந்த இளம்பெண்ணின் தாய்க்கு, நீ வாழ்வதற்கு 10 நிமிடங்கள் கிடைத்துள்ளது என்று அனுப்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவன் இதற்கு முன்னால் இரண்டு இஸ்லாம் பெண்களை பலாத்காரம் செய்துள்ளான். இவன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு Vincent Tappu என்பவர் உதவியாக இருந்துள்ளார். பெண்களை கடத்திகொண்டு வரும் பணியினை செய்வார். தற்போது, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவர் மீதும் கற்பழிப்பு, கொலை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இவர்கள் இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டினை மறுத்துள்ளனர்.