மீண்டும் ஆடையால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளான ஐஸ்வர்யா ராய்!!

588

முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் 44 வயதினை தொட்டாலும், இன்றும் அழகு பதுமையாக வலம் வருகிறார்.

இவர் எங்கு சென்றாலும் இவரை பார்ப்பதற்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது, இவர் தனது வயதுக்கு ஏற்றாற்போல் ஆடைகளை அணிந்துகொள்வதில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் டுபாயில் உள்ள மகால் ஒன்றின் திறப்பு விழாவிற்கு, நீல நிற ஆடையில் சென்றிருந்தார். இவரை கண்டதும், ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். ரசிகர்களின் அருகில் சென்ற ஐஸ்வர்யா, தனது ஆடையால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகியுள்ளார்.

ஒரு பக்கம் மட்டுமே Sleeve உள்ளதால், மற்றொரு பக்கத்தை தனது கைகளால் மறைத்துக்கொண்டு, ரசிகர்களுடன் கைகுலுக்கியுள்ளார். இது முதல் முறை கிடையாது, கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஏற்பாடு செய்திருந்த இந்திய சுதந்திர தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இவர், பெருமைப்பட வேண்டிய நேரத்தில் தனது ஆடையால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.