ரயில் முன் செல்பி ஏன் : நண்பனை இழந்த இளைஞனின் கண்ணீர் வாக்குமூலம்!!

521

ஓடும் ரயில் முன் செல்பி எடுக்க முயன்ற போது ரயில் மோதி படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கோவை உடையாம்பாலையத்தை சேர்ந்த சுஜிஷ், தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். சுஜிஷ் உடன் படிக்கும் கல்லூரி நண்பரான சதீஷ்குமார் ஆகிய இருவரும் சூலூர் அருகே தண்டவாளத்தின் பக்கத்தில் நின்று செல்ஃபி எடுத்துள்ளனர்.

அவ்வேளையில் ஈரோட்டிலிருந்து கேரளா சென்ற சரக்கு ரயிலின் இன்சின் மோதி நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக படுகாயம் அடைந்த அவர்கள் இருவரையும், அருகிலிருந்தவர்கள் சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமணைக்குக் கொண்டுவரப்பட்டும் சுஜீஸ் உயிரிழந்தார், அவரின் நண்பர் சதீஷ் குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சதீஷ் குமாரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், செல்பி எடுத்து பேஸ்புக்கில் பதிவிட நினைத்தோம், அந்நேரத்தில் கவனக்குறைவாக இருந்ததால் விபத்து நடந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.