வவுனியாவில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!!

1266

வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் கஞ்சாப் பொதியுடன் நபர் ஒருவரை நேற்று(25.01) மாலை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் வீதியால் சென்ற நபர் ஒருவரிடம் சந்தேகத்தில் சோதனை மேற்கொண்ட பொலிசார் அவரிடமிருந்து கஞ்சாப் பொதி ஒன்றினை மீட்டுள்ளனர். சூடுவெந்தபிலவு பகுதியைச் சேர்ந்த 52வயதான நபர் ஒருவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவரிடம் எவ்வாறு கஞ்சா கிடைக்கப்பெற்றுள்ளது போன்ற ஏனைய விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் நெளுக்குளம் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.