இந்தியாவில் பாலியல் அடிமைகளாக விற்கப்படும் அகதிப் பெண்கள் : அதிர்ச்சித் தகவல்!!

748

மியன்மாரைச் சேர்ந்த 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருக்கிற சூழலில், ரோஹிங்கியா பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து ஆட்கடத்தல்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில, ரோஹிங்கியா அகதிப் பெண்கள் பலர் பாலியல் அடிமைகளாக இந்தியாவில் விற்கப்பட்டுள்ள சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

அப்படி விற்கப்பட்டவர்களில் ஒருவர் தான் ரஹிமா. தன்னுடைய 15 வயதில் தாய் நிலமான ரக்ஹைனை(மியன்மார்) விட்டு வெளியேறியுள்ளார் ரஹிமா. பின்னர் இரண்டு சர்வதேச எல்லைகளைத் தாண்டி இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்ட அவர், தன் தந்தை வயதைக் கொண்டு ஒரு நபருக்கு விற்கப்பட்டுள்ளார்.

“எனக்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டதா? என அந்த நபர் ஏஜெண்டிடம் கேட்டார். எனக்கு திருமணமாகவில்லை என்பதால் 20,000 ரூபாய்க்கு என்னை அவர் வாங்கிக் கொண்டார். திருமணமாகியிருந்தால் 15,000 ரூபாய்க்கு நான் விற்கப்பட்டிருப்பேன்” என ரஹிமா ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

“என் தந்தையை விட அவருக்கு ஒருசில வயது தான் குறைவாக இருக்கும். என்னை எங்கும் போக விடமாட்டார், மின்கம்பிகளால் தாக்கினார். ஐந்து வருடங்களுக்கு பிறகு என்னை வெளியேற அனுமதித்தார்” என்றார் ரஹிமா.

இவர் இப்போது வட இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முகாமில் வசித்து வருகின்றார். அந்த நபரால் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்ட ரஹிமா, இப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரைப் போன்று பல நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா பெண்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த ஆறு மாதங்களாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்து வரும் பெருமளவிலான ரோஹிங்கியா முஸ்லிம்களை குறிவைத்து ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக ஐ.ஓ.எம் சுட்டிக்காட்டியுள்ளது.

வங்கதேசத்தில் செயல்படும் தொண்டு நிறுவன ஊழியரான இப்த் நவாஸ், ரோஹிங்கியா முகாம்களில் பல பெண்கள் காணாமல் போகியுள்ளதாகவும் அதில் பலர் இந்தியா மற்றும் நேபாலுக்கு கடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்னையின் மீது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மட்டுமின்றி சர்வதேச நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.