விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு!!

432

சிலாவத்துறை, முருங்கன் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிலாவத்துறை நோக்கி சென்ற ட்ரக்டர் ஒன்று சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சைக்கிளில் பயணித்த சிறுமி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிலாவத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அகத்திமுருத்து பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுமி ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ட்ரக்டர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலாவத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.