வவுனியாவிற்கு வருகைதரும் ஜனாதிபதி : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

740

வவுனியா யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 05.02.2018 அன்று இடம்பெறவிருக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வருகை தரவுள்ள நிலையில் வவுனியா நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களினதும் , மைதானத்தினை சூழவுள்ள பகுதிகளிலும் உள்ளர்களினதும் பெயர், முகவரி, தொலைபேசியிலக்கம், அடையாள அட்டையிலக்கம் என்பவற்றை பொலிசார் சேகரித்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினரின் ஆலோசனையிலேயே இப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.