வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை 8.30 மணியளவில் இலங்கையின் 70வது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதாரனபத்திரன தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், பிரதம விருந்தினராக வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளருமான கே.காதர் மஸ்தான் வடமாகாண சபை உறுப்பினர் வி.ஜெயதிலக மற்றும் வன்னி பிராந்தியப்பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வன்னி பிராந்திய படைகளின் பிரதானி, கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்புப்படைகளின் பிரதானிகள், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலையர் பொறுப்பதிகாரி, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா, செட்டிகுளம், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செலயக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது.























