வட மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகவும், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான வைபவம் எதிர்வரும் 15ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் சுமார் பத்தாண்டு காலம் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிய 182 பேருக்கும் அதற்கு சமமான காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 142 ஆசிரியர்களுக்கும் இவ்வாறு நியமனம் வழங்கப்படவுள்ளது.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் வேண்டுகோளை அடுத்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மூலம் முன்வைக்கப்பட்ட குறித்த நியமனம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






