மூன்று மணித்தியாலம் மின்சாரத் தடையை ஏற்படுத்திய விபத்து!!

506

 
பாடசாலை மாணவர்கள் இருவரை ஏற்றிச் சென்ற வாகனமொன்று இன்று காலை விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நுவரெலியா நகர மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில் நுவரெலியா நகரத்திற்கு மூன்று மணித்தியாலம் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

நுவரெலியா பூங்கா வீதியில் வைத்து சாரதிக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வாகனத்தை அவரால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வாகனம் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு எதிரே இருந்த அதிக வலு கொண்ட மின்சார கம்பத்தில் மோதியுள்ளது. குறித்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.

மேலும், நுவரெலியா நகரத்திற்கான மின்சார தடையை சீர்செய்வதற்கான நடவடிக்கையில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.