05 வருடங்களும் 07 மாதங்களுடைய சிறுவனுக்கு 14 வயதுடைய சிறுமி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரச்சிகட்டுவ – வேரன்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சிறுவன் பல தடவைகள் இவ்வாறு பாலியல் துன்புறுத்தளுக்கு ஆளாகியுள்ளதாக சிறவனின் தாய் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






