வவுனியாவில் இலஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி கைது!!

517

வவுனியா, நெடுங்கேணி பிரிவுக்குட்பட்ட வன இலாகா அதிகாரி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மரம் வெட்டுவதற்கான அனுமதி வழங்குவதற்கு இலஞ்சம் பெற்ற நிலையிலேயே வவுனியா, நெடுங்கேணி பிரிவுக்குட்பட்ட வெடிவைத்தகல் பகுதியில் வைத்து வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய வன இலாகா அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..