குவைத்தில் இலங்கைப் பெண் தூக்கிட்டு தற்கொலை!!

615


 

இலங்கை பணிப்பெண் ஒருவர் குவைத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குவைத் Rabya பகுதியில் பணி செய்த குறித்த பெண் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு உள்துறை அமைச்சிற்கு தகவல் கிடைத்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணிடன் சடலத்தை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

தடயவியல் திணைக்களத்தில் அதிகாரிகள் சடலம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தற்கொலைக்கான காரணத்தை தீர்மானிக்க ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.