சிறந்த விவசாயிகளை கௌரவித்த வடக்கு முதல்வர்!!

922

 
முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறந்த விவசாயிகள் பண்ணையாளர்களை வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் கௌரவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நேற்று பிற்பகல் வடமாகாண அமைச்சர் கந்தையா சிவனேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

வடமாகாண விவசாயம், கமநல சேவைகளும் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன மீன்பிடி நீர்வழங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான விவசாயிகளும், பண்னையாளர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் ப.கமலேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதிஸ்வரன், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.