பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டப் (Tab) வழங்கும் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டப் (Tab) வழங்கும் இத்திட்டத்தால் 175,000 பாடசாலை மாணவர்களும், 28,000 ஆசிரியர்களும் பயனடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 5 பில்லியன் ரூபா செலவில் இந்த திட்டத்தினை முன்னெடுக்க தேவை இல்லை எனவும் டப் (Tab) வழங்குதவன் மூலம் நிதி வீண் விரயமாவதாகவும் ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.






