ஆர்யாவுக்காக இந்தியா சென்ற இலங்கைப் பெண்!!

864

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார் கனடா வாழ் இலங்கை பெண் சுசானா.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் நடைபெறும் முதல் சுயம்வர நிகழ்ச்சி “எங்க வீட்டு மாப்பிள்ளை”. இதில் நடிகர் ஆர்யா நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ள இருக்கின்றார்.

நடிகை சங்கீதா கிரிஷ் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் கனடாவில் வசிக்கும் இலங்கை பெண் சுசானா பங்கேற்றுள்ளார்.

சுவிஸ்லாந்தை பிறப்பிடமாக கொண்ட சுசானா, கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாவில் வசித்து வருகிறார். இவரது பூர்விகம் இலங்கை என்பதும், கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர்(Radiation Therapist) என்பதும் குறிப்பிடத்தக்கது.