ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக வெளிநாட்டு கடன் தொகையை பாரியளவில் அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இதன் காரணமாக வெளிநாட்டுக் கடன் தொகை சில தினங்களில் பாரியளவில் உயர்வை பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகை 30.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது, அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 155 ரூபாவாக காணப்பட்ட நிலையில் இந்தக் கடன் தொகை 4774 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது.
எனினும் அண்மையில் அமெரிக்க டொலரின் விலை மேலும் உயர்வடைந்த காரணத்தினால் இந்தக் கடன் தொகை 6160 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு கடன் பெறுமதி உயர்வடைவது நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.






