வவுனியாவில் கலை ஊக்குவிப்பு மன்றம் அங்குரார்ப்பணம்!!

1044

 
வவுனியாவில் கல்வி மற்றும் கலை, இலக்கிய துறையை விருத்தி செய்யும் வகையில் கலை ஊக்குவிப்பு மன்றம் வவுனியா குருமன்காடு பிரின்சஸ் ரோஸ் விடுதியில் நேற்று (25.02.2018) ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு மன்றத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் பூ.அபிசேக்கின் ஏற்பாட்டில் கலைஞர் மாணிக்கம் ஜெகன் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இணைப்பாளர்கள் கலந்து கொண்டதுடன் மிகவிரைவில் பொதுக்கூட்டத்தை நடாத்த எண்ணியிருப்பதாக அதன் இலங்கைக்கான இணைப்பாளர் பூ.அபிசேக் தெரிவித்தார்.

புலம்பெயர் தேசமான பிரான்ஸ் தேசத்தில் பவுல்.சி தயாரிப்பு நிறுவனத்தின் ஆலோசனை மற்றும் அணுசரணையுடன் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.