லொட்டரியில் விழுந்த £4 மில்லியன் பரிசு : ஆளே மாறி போன திருநங்கை!!

1205

பிரித்தானியாவில் திருநங்கை ஒருவருக்கு லொட்டரியில் £4 மில்லியன் பணம் பரிசு விழுந்துள்ள நிலையில் அந்த பணத்தின் மூலம் பல அழகு சிகிச்சைகள் மேற்கொண்டு அழகாக மாறியுள்ளார்.

ஹல் நகரை சேர்ந்தவர் மெல்லிசா எடி (57), சாதாரண டாக்ஸி ஓட்டுநரான இவருக்கு லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. மெல்லிசா வாங்கிய நேஷனல் லொட்டரி சீட்டுக்கு கடந்த டிசம்பர் மாதம் £4 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய மெல்லிசா தன்னை அழகாகவும், இளமையாகவும் மாற்றி கொள்ள முடிவு செய்தார். அதன்படி உடல் தோல்களில் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை இதுவரை £30,000 செலவில் மேற்கொண்டுள்ள மெல்லிசா மிக அழகாக மாறியுள்ளார்.

அவரின் பழைய புகைப்படம் மற்றும் புதிய புகைப்படத்தை பார்த்தால் இரண்டுக்கும் மிக பெரியளவில் வித்தியாசம் உள்ளது. இந்த விடயம் மெல்லிசாவை விரைவில் மணக்கவிருக்கும் அவரின் காதலர் ரேச்சேல் நேசனுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அவர் கூறுகையில், பழைய மெல்லிசாவுக்கும் தற்போது இருக்கும் மெல்லிசாவுக்கு அதிக வித்தியாசம் உள்ளது மகிழ்ச்சிளிக்கிறது என கூறியுள்ளார்.

மெல்லிசா கூறுகையில், எனக்கு எப்போதும் இளமையாகவும், பெண்ணியத்துடனும் இருக்க வேண்டும் என ஆசை, என்னுடைய மூக்கு மற்றும் பற்களை மாற்றவும் விரைவில் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளேன் என கூறியுள்ளார்.