வவுனியாவைச் சேர்ந்த நால்வர் கடந்த மூன்று தினங்களில் தூக்கிட்டு தற்கொலை!!

1470

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் கடந்த மூன்று தினங்களில் தற்கொலை செய்துள்ளமை வவுனியா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

காதல் விவகாரத்தினால் வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள (ARIEL) அமைப்பின் விடுதியில் கடந்த (25.02.2018) அன்று காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் ரகுநாதன் சுகிர்தரன் (வயது 31) என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.

 

இந் நிலையில் அவரது காதலியும் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் புதுக்குடியிருப்பு எட்டாம் வட்டாரத்திலிலுள்ள அவரது வீட்டு கிணற்றினுள் வீழந்து தற்கொலை செய்துள்ளார்.

வவுனியா ஆச்சிபுரம் 8ம் ஒழுங்கையைச் சேர்ந்த (13 வயது மாணவி) கல்வி கற்ற பாடசாலையில் ஆசிரியர் திட்டியதால் மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பெற்றோரினால் காப்பாற்றப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டு குணமாகிய நிலையில் நேற்றைய தினம் (26.02.2018) மாலை வீட்டில் யாரும் அற்ற சமயத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.

வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதி முதலாம் ஒழுங்கையில் இன்று (27.02.2018) மதியம் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் கலைச்செல்வன் (வயது 28) என்பவரின் சடலம் மீட்கப்பட்டது

இன்றைய தினம் (27.02.20178) வவுனியாவை சேர்ந்த சாமுவேல் என்ற மாணவன் யாழ். பலாலி வீதி கந்தர்மட சந்திக்கு அருகில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவ்வாறு வடபகுதியில் தினசரி பலர் தற்கொலை செய்வது தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.