வெளிநாட்டில் வாழும் யுவதி ஒருவர் 24 வருடங்களின் பின்னர் தனது சொந்த தாயை சந்தித்துள்ளார்.
கடந்த 24 வருடங்களுக்கு முன்னர் நெதர்லாந்து தாய் ஒருவர் இலங்கையில் இருந்து குழந்தை ஒன்றை அழைத்து சென்றுள்ளார்.
24 வருடங்களின் பின்னர் வளர்ந்த இலங்கை யுவதியை அழைத்துக் கொண்டு நெதர்லாந்து தாய் நாட்டுக்கு வந்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி இலங்கை வந்த இருவரும், காலி, தவலம, கம்பியஸ பகுதிக்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த யுவதியின் உண்மையான தாயை சந்தித்துள்ளார்.
நெதர்லாந்தில் சிறு மருத்துவ ஆய்வகம் நடத்தும் நெதர்லாந்து நாட்டின் பெகர் பிம்கேவுக்கு பிள்ளைகள் இல்லாமையினால் கடந்த 24 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகைத்தந்து குழந்தை ஒன்றை தத்து எடுத்துள்ளனர்.
ஏழு மாத குழந்தையாக இருக்கும் பெண் குழந்தையை நெதர்லாந்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அன்று ரத்நாயக்க முதியனசலாகே நதீகா என அழைக்கப்பட்டவர் தற்போது நெஸ்டடமான் நதீகா என அழைக்கப்படுகின்றார்.
தற்போது 24 வயதுடைய யுவதியாக அவர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார். பாடசாலை கல்விக்கு பின்னர் ஹோட்டல் முகாமைத்துவ துறையில் தொழில் செய்தவருக்கு சொந்தமாக ஹோட்டல் ஒன்றை நடத்தும் ஆசை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







