அந்தக் குழந்தையின் கடைசி மூச்சு சத்தம் இன்னும் கேட்கிறது : நெஞ்சை உருக்கும் நிகழ்வு!!

728

சிரியாவில் நடக்கும் போர் குறித்து புகைப்படக்காரர் முகமது பத்ரா அதிர்ச்சியளிக்கும் நிலவரங்களை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதலினால், கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் நடைபெற்று வரும் இந்த போரின் புகைப்படங்களில் பெரும்பாலானவற்றை, முகமது பத்ரா எனும் புகைப்படக்காரர் எடுத்துள்ளார்.

முகமது பத்ரா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், இங்கு ரசாயன குண்டுகள் அதிகமாக வீசப்படுகின்றது, உடலில் எந்த காயமும் இல்லாமல் வருவார்கள், ஆனால், 10 நிமிடத்தில் இறந்து விடுவார்கள்.

அங்கு மோசமான வாசனை ஒன்று வீசும், குளியல் அறையை குளோரின் போட்டு கழுவியபின் வரக்கூடிய வாசனை. அவர்கள் குளோரின் குண்டுகளை பயன்படுத்துகிறார்கள், பிறரிடம் இருந்து வரும் அந்த வாசனையே என்னை வேலை செய்ய விடவில்லை.

அப்படி இருக்கும்போது, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்கள். எல்லா நாடுகளும் பெரிய குற்றம் செய்கிறார்கள். இதில் எல்லோருக்கும் பெரிய பங்கு இருக்கிறது, அமைதியாக இருக்கும் மக்களுக்கும் பெரிய பங்கு இருக்கிறது.

இங்கு, குழந்தைகள் தான் அதிகமாக செத்து மடிகிறார்கள். நான் உள்ளே நுழைந்த போது அங்கு, மூன்று குழந்தைகள் மூச்சு வாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.

எனக்கு அருகில்தான் அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள், என் கண் முன்னே அதில் ஒரு குழந்தை மரணம் அடைந்தது, அந்த கடைசி மூச்சுக்காற்றை என்னால் எப்போதும் மறக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.