​லொறி மோதியதில் தாய் பலி : மகன் வைத்தியசாலையில்!!

488

கிரிவுல்ல – அதுருவல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

லொறி ஒன்று முறையற்ற விதத்தில் முன்னொக்கி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த விபத்தில் மோட்டர் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த பெண், ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, விபத்தில் படுகாயமடைந்த மோட்டர் சைக்கிள் ஓட்டுனரான அந்த பெண்ணின் மகன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

லொறி ஓட்டுனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முன்னிலைப்பத்தப்பட்ட பின்னர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.