வவுனியாவில் வர்த்தக நிலையங்களை பூட்டி கதவடைப்பு போராட்டம்!!

799

 
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையும் கண்டித்து வவுனியாவில் முஸ்லிம் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை பூட்டி முழு கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக நகர பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலைய பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இரவு முதல் இரணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் ஏனைய வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு இயல்பு நிலையில் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.