மன்னாரில் பெய்த மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில்!!

807

 
மன்னாரில் நேற்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாக, அங்குள்ள தாழ் நில பிரதேசத்தில் காணப்படும் பல குடியிருப்புக்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் காணிகள் வழங்கப்பட்டு, குடியமர்த்தப்பட்ட சில கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், எமில் நகர் போன்ற கிராமங்களில் உள்ள வீடுகளும், பாதைகளும் நீரில் மூழ்கி உள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த கிராமங்களில் உள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக மழை நீடித்தால் குறித்த கிராமங்களில் உள்ளவர்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.