வவுனியாவில் மாவட்ட செயலக அலுவலர்களுக்கு உடற்பயிற்சி மையம்!!

622

 
முதல் முறையாக வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (14.03) பொது ஊழியர்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியமான திறமையான சேவையின் உயர் மட்டத்தை உயர்த்த வடமாகாண அரசாங்க அலுவலர்களை இலக்காகக் கொண்டு உடற்பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நோக்கத்திற்காக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்ன விதானபத்ரன விளையாட்டுத்துறை அமைச்சிடம் கேட்டதற்கிணங்க 6.5 மில்லியன் நிதி வழங்கப்பட்டு அந்த நிதியில் உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டது.

ஆரம்ப விழாவில் வவுனியா மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்கள், அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.