வவுனியாவில் இடி, மின்னல் தாக்கியதில் கிறிஸ்தவ தேவாலயம் சேதம்!!

788

 
வவுனியாவில் இடி மின்னல் தாக்கியதில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தீப்பற்றி சேதமடைந்துள்ளது.

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள நாற்சதுர சுவிசேச சபை என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று (16.03.2018) மாலை 4.30 மணிக்கு இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக இவ் அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.

அனர்த்தம் இடம்பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இலங்கை மின்சார சபையினர் மின்சார இணைப்பை துண்டித்திருந்ததுடன் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்திருந்தனர். இதன் காரணமாக பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருந்தது.

கடுங்காற்றுடன் வவுனியாவில் மழை பெய்து வருவதால் காற்றின் காரணமாக கூரைத் தகரம் ஒன்று பறந்து சென்று உயர் அழுத்த மின்கம்பியில் மோதிய நிலையில் வவுனியாவில் சில மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.