வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலய மணவாளக்கோல விழாவும் பால்குட பவனியும்!!

863

 
வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோவில் கும்பாபிஷேக தின நவோத்திர சகஸ்ரசத (1008) சங்காபிஷேக மணவாளக்கோல விழாவும் பால்குட பவனியும் நேற்றுமுன்தினம் (21.03) வெகு விமர்சையாக நடைபெற்றது.

அன்றய தினம் வவுனியாவின் முக்கிய பிரமுகர்களும் ஏராளமான பக்த அடியவர்களும் விழாவை சிறப்பித்தமை சிறப்பம்சமாகும் .

மேலும் கலை நிகழ்வுகள், நாதஸ்வர சங்கமம், சமய சொற்பொழிவுகள், பண்பாட்டினை பிரதிபலிக்கும் கலாசார அம்சங்கள் என்பன விழாவை மேலும் மெருகூட்டியது குறிப்பிடத்தக்கது.