வவுனியா நகரில் அமைந்துள்ள வவுனியா காமினி மகாவித்தியாலயத்தினை மும்மொழி பாடசாலையாக மாற்றுவதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தின் போது வவுனியா அரசாங்க அதிபர் விதான பத்திரன தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமது மாவட்ட செயலகத்திற்கு அருகேயிருக்கும் காமினி மகா வித்தியாலத்தினை தமிழ், சிங்கள, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளும் கற்கக்கூடிய பாடசாலையாக இதனை அபிவிருத்தி செய்வதற்கும் அதே போன்று இவ் விடயம் தொடர்பாக பரிட்சை ஆணையாளர், கல்வி அமைச்சர் செயலாளர்களுடன் கலந்துரையாடி வடமாகாணத்தின் பரீட்சைகள் நடைபெறும் நிலையமாகவும் மாற்றியமைக்க தீர்மானித்துள்ளேன் என தெரிவித்தார்.






