வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான பல்வேறு முடிவுகள் எடுக்கப்படவுள்ளதுடன் முக்கியத்துவம் வாய்ந்த சில தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளது.
இருப்பினும் குறித்த கூட்டத்தில் இணைத்தலைவரான வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, மாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களில் கலந்து கொள்ளத இவர்கள் மாவட்டத்திற்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.






