திருமணத்திற்கு முதல் நாள் மகளை கொடூரமாக கொன்ற தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!

623

இந்தியாவின் கேரள மாநிலத்தில், அடுத்த நாள் திருமணம் என மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த இளம்பெண்ணை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொயிலாண்டியை சேர்ந்தவர் பிரிஜேஷ். ராணுவ வீரரான் இவர் உத்தர பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் பணியாற்றி வருகிறார்.

மலப்புறம் அருகிலுள்ள பூவதி கண்டியை சேர்ந்த ராஜன் என்பவரின் மகள் ஆதிரா. மஞ்சரி பகுதியில் உள்ள மெடிக்கல் கல்லூரியில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பிரிஜேஷ் மற்றும் ஆதிரா இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஆதிராவை தாம் காதலிப்பது தொடர்பாக பிரிஜேஷ் தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.

ஆனால் ஆதிரா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆரம்பத்தில் எதிர்த்த குடும்பத்தினர், பின்னர் பிரிஜேஷின் காதலை புரிந்துகொண்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆதிராவின் வீட்டில் பூகம்பவே வெடித்தது. ஆதிராவின் காதல் அவரது தந்தைக்கு தெரிய வரவும், உடனே அவர் தமது மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

இந்த நிலையில் ஆதிரா தமது காதலை தெரிவிக்க, ஒட்டுமொத்த குடும்பவும் கொந்தளித்துள்ளது.

மேலும் ஆதிராவின் தந்தை ராஜன், பிரிஜேஷை அழைத்து மிரட்டவும் செய்துள்ளார். இருப்பினும் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார் பிரிஜேஷ்.

இந்த நிலையில் திடீரென்று ஒருநாள் ஆதிரா வீட்டை விட்டு வெளியேறி தனது தோழி ஒருவரது வீட்டில் தங்கியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ராஜன் உடனடியாக பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். தமது மகளை பிரிஜேஷ் கடத்தி சென்றுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஒருவாரம் கடந்த நிலையில் திடீரென்று ராஜன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறி பொலிசாரிடம் இருந்து பிரிஜேஷுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இதனையடுத்து உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிரிஜேஷும், தோழியின் வீட்டில் இருந்து ஆதிராவும் கொயிலாண்டி வந்துள்ளனர்.

5 நாட்களில் திருமணம் என இருதரப்பினரும் பேசி முடிவெடுத்துள்ளனர். திருமணத்திற்கென தாலி, நகைகள், துணிகள் என அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டிருந்தார் பிரிஜேஷ்.

திருமணத்திற்கு ஒரு நாள் முன்னர் ஆதிராவிடம் இருந்து பிரிஜேஷுக்கு அழைப்பு வந்துள்ளது. தமது தந்தை மிரட்டுவதாகவும், திருமணம் நடக்காது எனவும், தனக்கு பயமாக இருப்பதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

23 ஆம் திகதி மாலையில் பிரிஜேஷுக்கு மீண்டும் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் ஆதிராவுக்கு சின்னதாக விபத்து நேர்ந்துள்ளதாகவும் அவர் தற்போது மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் தெரியவந்தது.

பதறியடித்து மருத்துவமனை சென்ற பிரிஜேஷுக்கு கண்ட காட்சிகள் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தந்தையுடன் நடந்த வாக்குவாதத்தில் ஆதிரா மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். ஆதிராவின் தந்தை மது போதையில் கத்தியால் சரமாரிடாக ஆதிராவை தாக்கியுள்ளார்.

இதில் சம்பவயிடத்திலேயே 21 வயது ஆதிரா துடிதுடிக்க இறந்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆதிராவின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்