நாட்டின் பல பாகங்களிலும் இன்று(27.03) 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
மேல் மாகாணம், சப்ரகமுவ, மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இன்று 75 மில்லி லீற்றர் மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக கடுமையான காற்று வீசக்கூடும். இடியினால் ஏற்படும் அபாயங்களை குறைத்துக் கொள்வதற்கு அவசியமான நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாந்தோட்டை தொடக்கம் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையூடாக காங்கேசன்துறை வரையான கரையோர பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
ஏனைய கரையோர பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டைச்சூழவுள்ள கடல் கரையோர பிரதேசங்களில் கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி காற்று வீசும்.
காலியில் இருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும், காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் காற்றின் வேகம் 30- 40 கிலோமீற்றர் வரை வீசக்கூடும்.
ஏனைய பிரசேதங்களில் 20- 30 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் காணப்படக்கூடும்.
இடியின் போது குறித்த பிரதேசங்களில் கடுமையான காற்று வீசுவதுடன் கடல் அலையின் வேகமும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.






