பிரபல திரைப்பட நடிகை ஜெயந்தி(73) உடல்நலக் குறைவால் காலமானதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஜெயந்திக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்ப்ட்டுள்ளது.
குறிப்பாக மிஸ் மாலினி என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்கு அன்றை இந்திய பிரதமர் இந்திரா காந்தி கைகளால் தேசிய விருதை பெற்றுள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் ஜெயந்தி.
பெங்களூரில் வசித்து வந்த ஜெயந்திக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று நண்பகல் 1.45 மணியளவில் ஜெயந்தி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.






