பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

641

அமெரிக்காவில் பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு டகோடா மாகாணத்தை சேர்ந்தவர் கேட்ரினா ஷேங்குருக்ஸ் (30), இவர் மகன் கைலின் (2).

கடந்த 2016-ஆம் ஆண்டு யூன் மாதத்தில் கைலின் தனது வீட்டு படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளான், பின்னர் தனது அம்மா கேட்ரினாவை நோக்கி திருட்டு முழி முழித்துள்ளான்.

இதையடுத்து கைலின் மீது ஆத்திரப்பட்ட கேட்ரினா அவனை பெல்டால் அடித்ததுடன், கையாலும் தாக்கி கீழே தள்ளியுள்ளார்.

அடித்து முடித்த பின்னர் தனது அம்மா சோன்யா துப்ராய்க்கு போன் செய்து தனது வீட்டுக்கு வரவழைத்தார்.

பின்னர் கைலினுக்கு அப்பிள் ஜூஸ் கொடுக்க சோன்யா முயன்றுள்ளார். ஆனால் கையின் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் உயிர் பிரிந்தது.

இதையடுத்து பொலிசார் கேட்ரினாவை கைது செய்தனர், கைலின் உடலில் 70 சதவீதம் காயம் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

கேட்ரீனா மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மகனை அடிக்கும் போது, தான் மது அருந்தியிருந்ததாக அவர் திங்களன்று நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.

விசாரணை அதிகாரிகள் கூறுகையில், கேட்ரீனா குற்றத்தை முழுவதுமாக ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர்.