வவுனியாவில் சுயேட்சைக்கு குழு-1 பிரதேச சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு!!

685

 
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை சுயேட்சைக்கு குழு–1 இல் மீன் சின்னத்தில் போட்டியிட்ட வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் தனது ஒன்றியத்திற்கு கிடைத்த இரு ஆசனங்களுக்கான உறுப்பினர் நியமனத்திற்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று (30.03) வெள்ளிக்கிழமை ஒன்றியத்தின் தலைவர் எம்.பி.நடராஜ் தலைமையில் வவுனியா நகரசபை பழைய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இச் சத்தியப்பிரமாண நிகழ்வில் சி.நடராஜ்- தோணிக்கல், இ.விஸ்வநான் – பூம்புகார் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த இருவரும் அமைப்பின் செயலாளரும் அகில இலங்கை சமானதான நீதவானுமாகிய பொ.ரட்ணம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.சந்திரபோஸ் திறந்த பல்கலைக்கழகம் கொழும்பு, அரசியல் விஞ்ஞானப் பீட விரிவுரையாளர் ஆர்.ரமேஸ் பேராதனை பல்கலைக்கழகம், சமூக அபிவிருத்தி நிறுவனம் இயக்குனர் பொ.முத்துலிங்கம் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக ஆர்.சிவரட்ணம், ஆர்.இராஜேந்திரம், தேசபந்து, ராம் ஆறுமுகம் ஆகியோருடன் கிராம தலைவர்கள், வர்த்தகர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.