இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலியாவில் துணிச்சலாக செயற்பட்டவருக்கான விருதினை பெற்றுள்ளார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சொஹான் சேனாநாயக்க என்ற இளைஞன் அவுஸ்திரேலியாவின் துணிச்சலுக்கான விருதான ‘Bravery Award’ வழங்கப்பட்டுள்ளது.
சொஹான் சேனாநாயக்க தனது உயிரையும் துச்சமாக மதித்து பெண்ணொருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை, மெல்பேர்ன் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து சொஹான் சேனாநாயக்க கருத்து வெளியிடுகையில்,
பயணிகளுக்கான தகவல் திரையில், ரயில் வருவதற்கு ஒரு நிமிடமே உள்ளதாக காட்டியது. அத்தகைய ஒரு பரபரப்புமிக்க நேரத்திலேயே நான் ரயில் தண்டவாளத்தினுள் குதித்தேன்.
இதன்போது அப்பெண் சுயநினைவோடு உள்ளாரா என பரிசோதித்தேன் ஆனால் அவர் சுயநினைவுடன் இருக்கவில்லை. இதன்போது இன்னொருவரும் மேடையிலிருந்து குதித்தார். நாம் அவரை 30 செக்கன்களுக்குள் தூக்கி எடுத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நபரினதும் வாழ்க்கை முக்கியமானது, ஒரு உள்ளுணர்வின் அடிப்படையிலேயே குதித்து அவரைக் காப்பாற்றினேன். இது இன்னொரு மனித உணர்வு என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே என்னால் என்ன முடியுமோ அதை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது என சொஹான் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த இரு இளைஞர்களின் துணிச்சல்மிக்க செயற்பாட்டினை கௌரவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் விருது வழங்கியுள்ளது.