ரவுடியை அரிவாளுடன் துரத்திச் சென்ற பதபதைக்க வைக்கும் காட்சி!!

875

சென்னை வியாசர்பாடி பகுதியில் ஹரிகிருஷ்ணன் என்ற ரவுடியை முகமூடி அணிந்த 5 பேர் துரத்தி சென்றுஅரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த ஹரி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலி சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆந்திராவில் பப்லு என்ற ரவுடி கொல்லப்பட்ட சம்பவத்தில் ஹரிகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் பப்லுவின் கூட்டாளிகள் ஹரிகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது

அவரை வெட்டிய கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது.

ரவுடிகள் அரிவாளுடன் துரத்திச் சென்ற பதபதைக்க வைக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. இந்த காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.