8 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் : இளைஞரை அடித்துக் கொன்ற ஊர் பொதுமக்கள்!!

596

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளியன்று உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள லொனி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியில் உள்ள ஜிதேந்திரா (24) கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

மேலும் அச்சிறுமியை இது தொடர்பாக வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை அந்த சிறுமி ஜிதேந்திராவிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்தார் பின்னர் தனது குடும்பத்தாரிடம் தனக்கு நடந்த கொடுமை அனைத்தையும் அந்த சிறுமி கூறியுள்ளார்.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் சென்று ஜிதேந்திராவுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த ஜிதேந்திராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் ஜிதேந்திராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

ஜிதேந்திராவால் பாதிக்கப்பட்ட சிறுமியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இளைஞர் சிறுமியை பலாத்காரம் செய்த பரபரப்பு அடங்குவதற்குள் ஊர் பொதுமக்கள் அந்த இளைஞ்சரை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது