நள்ளிரவில் கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை : அதிர்ச்சி சம்பவம்!!

612

தமிழ்நாட்டில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் அம்பலமூர்த்தி. இவர் மனைவி சாந்தி (32). தம்பதிக்கு சந்தோஷ் (8) என்ற மகன் உள்ளான்.

அம்பலமூர்த்தி வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் சாந்தி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் தனி அறையில் மகனுடன் சாந்தி தூங்கினார்.

நள்ளிரவில் சாந்தி வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவர் மீதும், சந்தோஷ் மீதும் மயக்க ஸ்பேரே தெளித்த நிலையில் இருவரும் மயங்கினர்.

இதைத் தொடந்து அந்த கும்பல் சாந்தியின் கழுத்தை கத்தியால் அறுத்த நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

பின்னர் அந்த கும்பல் சாந்தியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை திருடி சென்றது.

காலை மயக்கம் தெளிந்து எழுந்து தாய் சடலமாக இருப்பதை கண்டு சந்தோஷ் கதறிய நிலையிலேயே இது வெளியில் தெரியவந்தது.

இதையடுத்து நகையை திருடும் நோக்கில் மர்ம நபர்கள் சாந்தியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.