வவுனியாவில் இரவுவேளை UNP அமைப்பாளர் செய்த காரியம்!!

585

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில்,

வவுனியாவில் தம்பா விடுதியின் உரிமையாளரான பிரேமனந்தராஜா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான கருணாதாச இருவரும் பட்டாசு கொழுத்தி கொண்டாடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது

கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றில் தேற்கடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இந்த வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் ரணிலுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக, வவுனியா நகரப்பகுதியில் (பழைய பேருந்து நிலையத்தில்) இரவு 11 மணியளவில் தம்பா விடுதியின் உரிமையாளரான பிரேமனந்தராஜா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான கருணாதாச இருவரும் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.