கடந்த 29ம் திகதி வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் உதயகுமார் தனுசியன் 8A,B பெறுபேற்றைப்பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மேலும் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..
கிரிதரன் கலையமுதன் 8AC, கிருஷ்ணகுமார் கீர்த்திகன் 7A2B, நரேந்திரன் விஷவா 7A,CS, திலகராசா மோனிகா 7A,B,S, சுரேந்திரன் கோபிகா 6A,B,2C, ஜோச்சந்திரன் லக்சிகா 5A,4C மேலும் கணிதம் உட்பட 27 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.






