வவுனியாவில் பல கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!!

601

வவுனியாவில் பல கொள்ளைச்சம்பவங்களுடனும் தனிமையில் இருக்கும் பெண்களிடம் கொள்ளையடித்து வந்த நபரை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் பொருப்பதிகாரி மற்றும் சார்ஜன்ட் ஜேசுதாசன் தலைமையிலான குழுவினர் திட்டமிட்டு கைது செய்துள்ளனர்.

அம்பலாங்கொடையை சேர்ந்த 30வயதுடைய அப்துல் ரஸாக் முஹமட் ரமீஸ் என்கின்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்ட நபராகும்.

இதேவேளை கடந்த வருடம் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் சங்கிலியை அபகரித்தார் என்ற குற்றச்சாட்டில் வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த இம்பராசா தயாபரன் என்கின்ற நபரையும் கைது செய்துள்ளதுடன் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்