வவுனியா சிற்றி கிட்ஸ் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா கடந்த 07.04.2018 சனிக்கிழமை முன்பள்ளி மைதானத்தில் முன்பள்ளி நிர்வாகி திரு .S. நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் வவுனியா பொது வைத்திய சாலையின் வைத்தியர் திருமதி . ரேவதி அற்புதராஜா பிரதம விருந்தினராகவும் திரு.பேர்னாட் ( முன்னாள் பீடாதிபதி வவுனியாதேசிய கல்வியியல் கல்லூரி ) திரு. ரி. பூலோகசிங்கம் (அதிபர் – வவுனியா இந்து கல்லூரி ) திரு .ரி. செந்தில்ரூபன் (நகரசபை உறுப்பினர் -இறம்பைக்குளம் வட்டாரம்) ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
மேற்படி முன்பள்ளி மாணவர்களின் பான்ட் வாத்திய அணி விருந்தினர்களை அழைத்து வர பிற்பகல் 3.00 மணியளவில் விளையாட்டு போட்டி ஆரம்பமாகியது. நிகழ்வின் போது சிறுவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இடைவேளை உடற்பயிற்சி நிகழ்வுகள் மற்றும் வினோத உடை நிகழ்வு என்பனவும் இடம்பெற்றது .